ராஜீவ் கொலை: ராகுல்-பிரியங்காவை சந்தித்து விளக்க கருணா விருப்பம்
கொழும்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து, ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கான சூழல் குறித்து விளக்க விரும்புவதாக கருணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி..
நீங்கள் உடல்களைப் பார்த்தீர்களா, யாரையெல்லாம் அடையாளம் காட்டினீர்கள்?
நான் பிரபாகரன் உடலை மட்டுமே பார்க்க போனேன். 100 சதவீதம் அது பிரபாகரன்தான்.
நிச்சயமாக அது பிரபாகரன்தானா, வேறு யாராவதாக இருக்க வாய்ப்பு உண்டா?
நிச்சயமாக அது பிரபாகரன்தான். அதில் சந்தேகமே இல்லை. நான் அவருடன் 22 வருடம் இருந்தவன். எனவே எனக்கு அவரை நன்றாக தெரியும்.
புலிகளின் படை அமைப்பு உங்களுக்கு நன்றாக தெரியும். பின்னர் எப்படி அவர்கள் தோற்றார்கள்?
ராணுவ உத்தியில் புலிகள் தவறு செய்து விட்டனர். பிரபாகரன் உள்பட அனைத்துத் தலைவர்களும் ஒரே இடத்தில் இருந்தது மிகப் பெரிய தவறு. அது தவறான முடிவு. ஆனால் அது ராணுவத்திற்கும், அரசுக்கும் மிகப் பெரிய உதவியாகி விட்டது.
பிரபாகரனை ராணுவம் சுட்டுத்தான் அவர் இறந்தாரா..
ஆமாம், ராணுவம் சுட்டுத்தான் அவர் இறந்தார் என்று கூறியுள்ளார் கருணா.












Click it and Unblock the Notifications