தேர்தல் முடிந்தது, மக்கள் துயரம் தொடர்கிறது - வரதராஜன் !
கோவை: தேர்தல் முடிந்தது, ஆனால் மக்கள் துயரம் தொடர்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் கூறினார்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை வெற்றி பெறச் செய்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் குஜராத்தி சமாஜத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் பேசியதாவது,
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணபலமும், அதிகார பலமும் நமது அணியின் வெற்றியைத் தட்டிப் பறித்துள்ளது.
மதுரையில் மட்டும் 10 லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.150 கோடி பணத்தை திமுக வாரி இறைத்துள்ளது.
சிவகங்கையில் தோற்று விட்டோம் என்று தெரிந்து ப.சிதம்பரம் வெளியேறிய பின்னர் டில்லியில் இருந்து வந்த தலையீட்டால் சில ஆயிரம் வாக்குகள் மாற்றப்பட்டு சிதம்பரம் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.
திருச்சியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னரும் சில மணி நேரங்கள் சான்றிதழ் தராமல் இழுத்தடித்தனர்.
இத்தகைய மோசடிகள் அதிகரித்திருப்பது தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்பதை உணர்த்துகிறது.
இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி ஜன நாயக உணர்வில் பற்றுள்ள மக்கள் தமிழகத்தில் அதிமுக அணிக்கு 12 இடங்களை அளித்துள்ளனர்.
ஜனநாயகத்திற்கு எப்போதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ, அப்போது எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் முறையில் விகிதாச்சாரப் பிரதி நிதித்துவத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம்.
நமது முன்னோர்கள் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தை தனிநபர்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது.
தேர்தல் தான் முடிந்ததே தவிர, மக்கள் படும் துன்ப துயரங்கள் தொடர்கிறது. விலைவாசி குறையவில்லை. விவசாயிகள் இன்னல் தீரவில்லை.
மத்தியில் ஆண்ட ஐ.மு.கூட் டணி அரசு அமைத்த பல கமிட்டிகளின் அறிக்கைகளைக் கூட அமல்படுத்தவில்லை.
குறிப்பாக விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி விவசாய விளைபொருட்களுக்கு 4 சதவீத வட்டி, உள்நாட்டு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்க பரிந்துரைத்தது. இதைக்கூட மத்திய அரசு இன்றுவரை அமலாக்க வில்லை.
தமிழகத்தில் கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் உள்ளது. அதே சமயம் 41 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்து அங்கு ஏகபோக பண முதலைகளுக்கு தடையற்ற மின்சாரம், அபரிமிதமான வரிச்சலுகைகள் என திமுக அரசு வாரி வழங்குகிறது. இது குறித்து வெள்ளையறிக்கை வெளியிட கலைஞர் மறுத்து வருகின்றார் என்று பேசினார்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications