தேர்தல் தோல்வி-விஜயகாந்த் தொடர் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

Vijaykanth
சென்னை: மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நாளை முதல் ஜூன் 15ம் தேதி வரை மாவட்டவாரியாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இதில் 9 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளினாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவி்ல்லை. மொத்தத்தில் 10 சதவீத வாக்குளை வாரியது இந்தக் கட்சி.

இந் நிலையில் கடந்த வாரம் 40 வேட்பாளர்களையும் சென்னைக்கு அழைத்து அவர்களிடம் தோல்விக்கான காரணங்களை கேட்டறிந்தார் விஜயகாந்த்.

பின்னர் தேர்தல் பொறுப்பாளர்களை வரவழைத்து அவர்களிடமும் தோல்விக்கான காரணங்களை கேட்டறிந்தார். இந் நிலையில் கட்டமாக கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளை மாவட்டவாரியாக நேரில் அழைத்து அவர்களிடமும் தேர்தல் தோல்விக்கான காரணங்களை விஜயகாந்த் விசாரிக்கவுள்ளார்.

இந்தக் கூட்டம் நாளை முதல் தொடங்கி ஜூன் மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+