For Daily Alerts
Just In
சேது-வாசனிடம் திமுக அமைச்சர்கள் கோரிக்கை
கடந்த அமைச்சரவையில் திமுகவின் டி.ஆர்.பாலு வசம் இருந்த நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.
நெடுஞ்சாலைத்துறை கேபினட் அமைச்சராக கமல் நாத்தும், கப்பல் போக்குவரத்துத்துறையின் கேபினட் அமைச்சர் பதவி வாசனிடமும் தரப்பட்டுள்ளது.
சேது திட்டம் கிடப்பில் உள்ள நிலையில் அதை வாசனிடம் சோனியா காந்தி அளித்துள்ளதன் மூலம் இத் திட்டத்தை நிறைவேற்றுவதில் காங்கிரசும் ஆர்வமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.
இந் நிலையில் நேற்று கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வாசனுக்கு ஒதுக்கப்பட்டவுடன் திமுக மத்திய அமைச்சர்களான அழகிரி, தயாநிதி, ராசா உள்ளிட்டோர் அவரை சந்தித்து தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
மேலும் சேது சமுத்திரத் திட்டம் மீதான தடைகளை நீக்க நடவடிக்கை எடுத்து இத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.
Comments
Story first published: Friday, May 29, 2009, 12:23 [IST]