இலவச டிவி-அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்!
உடுமலைப்பேட்டை: இலவச டிவி கோரி மலைப்பாதையில் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து அமைச்சர் சாமிநாதனை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
மேற்குத் தொடர்ச்சிமலையில் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்டு உள்ளது மானுப்பட்டி, ஜல்லிபட்டி, ராவணாபுரம், தேவனூர்புதூர் ஊராட்சிகள்.
இந்த ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
ராவணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச டிவி வழங்கும் நிகழ்ச்சி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இலவச டிவி வழங்கும் நிகழ்ச்சி நடப்பது குறித்து தகவல் அறிந்த மாவடப்பு, கருமுட்டி, பூச்சிகொட்டாம்பாறை, குழிப்பட்டி செட்டில்மெண்ட் பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் ராவணாபுரத்துக்கு படையெடுத்தனர்.
மலைப் பகுதியில் இருந்து 15 கி.மீ., தூரம் நடந்து வந்த இந்த மக்கள், நிகழ்ச்சிக்காக வந்த அமைச்சர் சாமிநாதனை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அமைச்சர் சாமிநாதன் சமாதானம் செய்தார். இதனையடுத்து அவர்கள் இலவச டிவி கோரி மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications