சென்செக்ஸ்-நிப்டி உற்சாகமான ஆரம்பம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு அதிகபட்ச உயர்வைச் சந்தித்துள்ளது இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டியில்.

வாரத்தின் துவக்க நாளான இன்று வர்த்தகம் எடுத்த எடுப்பிலேயே சூடுபிடித்தது.

280 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸில் வங்கித் துறைப் பங்குகள் அனைத்தும் நல்ல உயர்வைக் கண்டன.

பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி போன்றவற்றின் பங்குகள் கணிசமான உயர்வைக் கண்டன.

ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள்தான் அதிகபட்ச உயர்வைக் கண்டன. பங்கு ஒன்றுக்கு 230 ரூபாய்க்கும் அதிகமான விலையில் கைமாறின.

தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 90 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு காணப்பட்டது. இதன் மூலம் கடந்த 9 மாதங்களில் இல்லாத அதிகபட்ச உயர்வை இந்தியப் பங்குச் சந்தை கண்டது.

பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி நிப்டி 4519 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 14793 புள்ளிகளாகவும் இருந்தது.

இதர ஆசிய சந்தைகள் நிக்கி, ஹாங்செங்கிலும் கணிசமான உயர்வு காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+