நாளை தென்மேற்கு பருவமழை துவக்கம்
டெல்லி: தென்மேற்கு பருவமழை நாளை துவங்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி துவங்கும். ஆனால் இந்த ஆண்டு சற்று முன்னதாக கடந்த மே 23ம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதையடுத்து பருவமழை ஒரு வாரம் முன்னதாக துவங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் உருவான அய்லா புயல், தென் மேற்கு பருவ மழையின் வேகத்தை குறைத்தது.
இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அய்லா புயல் ஓய்ந்ததை அடுத்து நாளை முதல் தென்மேற்கு பருவமழை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பல மாநிலங்களிலும் பருவமழை கொட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகள் தென் மேற்கு பருவமழையால் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அரபிய மற்றும் வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த வேறுபாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து வங்க கடலின் வடக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளது. இதனால் நாளை தொடங்கும் மழை 5ம் தேதி வாக்கில் தீவிரமடையும் என்று கூறப்பட்டுள்ளது.
-
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications