For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி மேயர் தேர்தல்-காங். வேட்பாளர் சுஜாதா

By Staff
Google Oneindia Tamil News

Trichy
சென்னை: திருச்சி மேயர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுஜாதா போட்டியிடுகிறார்.

திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமான், நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால், மக்களவைத் தேர்தலிலும் அவர் தோற்றுவிட்டார்.

தற்போது காலியாக உள்ள திருச்சி மேயர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளிடையே கடும் போட்டா போட்டி ஏற்பட்டது.

இந் நிலையில் நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் சுஜாதா (38) போடியிடுவார் என்று இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு வெளியிட்டார்.

இதையடுத்து சென்னை வந்த சுஜாதா தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 60 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக-காங்கிரஸ் அணியில் 40 கவுன்சிலர்களும், அதிமுக அணியில் 20 கவுன்சிலர்களும் உள்ளனர்.

இதனால் நாளை நடைபெறும் மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதா வெற்றி பெறுவது நிச்சயமாகிிட்டது.

தென்னூர் பகுதி கவுன்சிலராக உள்ள சுஜாதா, மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X