நெல்லை புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
நெல்லை: நெல்லை மாவட்ட கலெக்டராக ஜெயராமன் இன்று பொறுப்பேற்றார்.
தேர்தலுக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை மாவட்ட கலெக்டராக பழனியாண்டி நியமிக்கப்பட்டார். தற்போது அவர் பொதுத்துறை இணை செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டு்ள்ளார்.
இதையடு்த்து நாகப்பட்டிணம் கலெக்டர் ஜெயராமன் நெல்லை கலெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று நெல்லை வந்த அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பழனியாண்டி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
1989ம் ஆண்டு தென்காசி ஆர்டிஓவாக பணியாற்றிய ஜெயராமன் பின்னர் மன்னார்குடி, கடலூர், ஆர்டிஓவாகவும், கடலூர் மாவட்ட வழங்கல் அதிகாரியாகவும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் சிறப்பு துணை கலெக்டராகவும் (நில எடுப்பு) தாஞ்சாவூர், சுனாமி மறுவாழ்வு சிறப்பு பணி ஆகிய பதவிகளில் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியவர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கோவை முதுநிலை மண்டல மேலாளர், மோகனூர் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அலுவலர், சேலம் மாநகராட்சி கமிஷனராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு இவருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது.
இன்று நெல்லை கலெக்டராகப் பதவியேற்ற பின் நிருபர்களிடம் பேசிய அவர், தாமிரபரணி ஆற்றில் முறைகேடாக மணல் அள்ளுவது தடுக்கப்படும். அரசு குவாரிகளிலும் மணல் அள்ளுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்.