இலங்கை: ஐ.நாவுக்கு ஆம்னஸ்டி கோரிக்கை
நியூயார்க்: மனிதாபிமானக் குழுக்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும், பத்திரிக்கையாளர்களும், ஐ.நா. குழுக்களையும் முழுமையான அளவில் இலங்கையில் நடமாட, வன்னிப் பகுதிக்குள்ளும், அகதிகள் முகாம்களுக்குள்ளும் செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்த வேண்டும், நிர்ப்பந்திக்க வேண்டும் என ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஐ.நா. அலுவலக பிரிவு தலைவர் யுவோன் டெர்லிங்கன் கூறுகையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இடம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் முகாம்களுக்கு செல்ல முழு அளவில் மனிதாபிமான குழுக்களையும், பிறரையும் இலங்கை அரசு நிபந்தனையின்றி அனுமதிக்க வேண்டும் என ஐ.நா.வும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் நிர்ப்பந்திக்க வேண்டும்.
அங்குள்ள மக்களுக்கு உணவு, மருந்து ஆகியவை பெரும் தட்டுப்பாடாக உள்ளது.
ஆனால் அவர்களுக்குரிய நிவாரண உதவிகளை வழங்க ஐ.நா. குழுக்களையோ அல்லது பிற மனிதாபிமான, மனித உரிமை அமைப்புகளையோ அனுமதிக்க இலங்கை அரசு மறுப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத செயலாகும்.
இலங்கைக்கு பான் கி மூன் சென்றபோது மனிதாபிமானக் குழுக்களை அனுமதிப்பதாக இலங்கை அரசு அவருக்கு உத்தரவாதம் அளித்தது. ஆனால் அதை அந்த அரசு இப்போது காற்றில் பறக்க விட்டு விட்டது. இதன் மூலம் ஐ.நா. அமைப்பின் மீதான ஒட்டுமொத்த நம்பகத்தன்மையும் தூர்ந்து தகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.
எனவே ஐ.நா. குழுக்களையும், பிற மனித உரிமை குழுக்களையும் முழு அளவில் அகதிகள் முகாம்களுக்குள் செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை நிர்ப்பந்தப்படுத்த வேண்டும்.
இதுதவிர அகதிகள் முகாம்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ.நா. மனித உரிமை கண்காணிப்பாளர்களை அங்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இலங்கை அரசும், விடுதலைப் புலிகள் அமைப்பும் செய்த போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.
அகதிகள் முகாம்களில் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. உதவிக் குழுக்களை அந்தப் பகுதிக்கு செல்ல விடாமல் அரசு தடுத்து வருகிறது என்றார் யுவோன்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications