விமானப்படை விமானம் கண்டுபிடிப்பு- உடல்கள் மீட்பு
இட்டாநகர்: காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
அருணாச்சல் பிரதேச மாநிலம், மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் கருகிய நிலையில் விமானத்தில் இருந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
ரிஞ்சி மலைப் பகுதியில், விமானம் சென்றபோது அதில் மோதி நொறுங்கி விழுந்துள்ளதாக தெரிகிறது. இந்த இடம், இந்திய - சீன எல்லைப் பகுதியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பலியானவர்களில் ஏழு பேர் விமானப்படையினர், ஆறு பேர் ராணுவத்தினர். அவர்களில் இருவர் விங் கமாண்டர்கள் ஆவர். 2 பேர் ஸ்குவாட்ரன் லீடர்கள், ஒருவர் பிளைட் லெப்டினென்ட்.












Click it and Unblock the Notifications