ஈவ் டீசிங்-திண்டுக்கல் மாணவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஈவ் டீசிங் காரணமாக திண்டுக்கல் பள்ளி மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த சுந்தரத்தின் மகள் ரம்யா (14) கே.பி.சத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இவருடன் அதே பள்ளியில் சரவணன் என்ற 19 வயது மாணவனும் படித்து வருகிறார். படிப்பில் அதிக அக்கறையில்லாத சரவணன் பல முறை பெயிலாகி உள்ளார்.

இந்நிலையில் இவர் ரம்யா செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின்னால் சென்று அவரை கேலி, கிண்டல் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் சரவணனது செயலால் எரிச்சலடைந்த ரம்யா, தனது வீட்டில் பெற்றோரிடம் தெரிவி்த்துள்ளார்.

இந்நிலையில் ரம்யா நேற்று உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ரம்யாவை பின் தொடர்ந்த சரவணன் அவரை ஈவ் டீசிங் செய்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த ரம்யா வீட்டுக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+