என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை முதல் ஸ்டிரைக் - மின் உற்பத்தி பாதிக்கும்
நெய்வேலி: நெய்வேலி அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தவிர்க்கும் வகையில் புதுச்சேரியில் இன்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தி்ல் ஈடுபடப் போவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்லன.
இதையடுத்து சென்னையில் உதவித் தொழிலாளர் நல ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து இன்று புதுச்சேரியில் பேச்சுவார்த்தை நடந்த வருகிறது. இதிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாளை முதல் காலவரையற்ற போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டம் நடந்தால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடுமையாக பாதிக்கும். இதனால் மின் உற்பத்தி பெரும் தடையை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications