பீகாரில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த 2008ல் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து பீகார் காவல் துறை தலைமையகம் வெளிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2007ம் ஆண்டை விட 2008ல் பெண்கள் எதிரான குற்றங்கள் அதிகரித்திருந்தது.
2007ல் பெண்கள் கடத்தப்பட்டதாக 1,012 வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் 2008ல் இது 1,494 ஆக உயர்ந்துள்ளது.
வரதட்சனை கொடுமை காரணமாக கொலை செய்யப்பட்ட பெண்கள் எண்ணிக்கை 2007ல் 1,226 ஆக இருந்தது. தற்போது 2008ல் அது 1,233 ஆக அதிகரித்துள்ளது.
வரதட்சனை கொடுமை காரணமாக சித்வரதை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 1,493லிருந்து 2,230 ஆக உயர்ந்துள்ளது.
ஈவ் டீசிங், மானபங்கப்படுத்துதல் போன்ற வழக்குகள் 20 அதிகரித்து 2008ல் 208 ஆக அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications