பியட்டின் அதிரடி அறிமுகம் 'கிராண்ட் பண்டோ'!

மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தி இப்போது சக்கப்போடு போடும் ஸ்விப்ட் ரக கார்களுக்கு கடும் போட்டி தரும் நோக்கில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கார் வடிவமைப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1200 மற்றும் 1300 சிசி திறன் கொண்ட இந்த நடுத்தர ரகக் கார்கள், டீஸல் எஞ்ஜின் பொருத்தப்பட்டவை. பெட்ரோல் மாடலும் உண்டு. இதுதான் இந்தக் காரின் சிறப்பம்சம். இந்தியாவில் ரூ.5 லட்சத்துக்குள் சொகுசு மாடல் டீஸல் எஞ்ஜின் கார் கிடைப்பது பெரிய விஷம்தான் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செடான் ரகக் கார்களுக்குப் பின் பியட் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மாடல் இந்த கிராண்ட் பண்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்ட்ராவில் உள்ள தங்கள் தொழிற்சாலையிலேயே, டாடா மோட்டார்ஸுடன் இணைந்து இந்தக் கார்களைத் தயாரித்துள்ளது பியட். மேலும் ஜெனரல் மோட்டார்ஸுடன் இணைந்து மேலும் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்தவும் பியட் திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications