திருப்பூர் சைமா சங்க தலைவரானார் வைகிங் ஈஸ்வரன்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் சைமா சங்க புதிய தலைவராக, வைகிங் குழுமங்களின் தலைவர் ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவராக நீண்ட காலம் மோகன் கந்தசாமி இருந்தார்.
அவரது மறைவுக்குப் பின்பு, நிர்வாகக்குழு மூலம் சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார். எட்டு மாதமாக தலைவராக இருந்த அவர், திடீரென தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால், புதிய தலைவர் தேர்வு செய்வதற்கான நிர்வாக குழு கூட்டம் சைமா வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். முடிவில் வைகிங் நிறுவன தலைவர் ஈஸ்வரன், தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சைமா மகாசபை கூட்டத்தை விரைவில் நடத்தி, அதன் மூலம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவும், சங்க பதிவை புதுப்பிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications