பத்து புதிய விமானம் வாங்க பாரமவுன்ட் ஆர்டர்
Subscribe to Oneindia Tamil

நிதி சீர்குலைவு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பாரமவுன்ட் நிறுவனம் புதிதாக பத்து விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பத்து விமானங்களும் ஏர்பஸ் ஏ -321 ரக விமானங்களாகும். மேலும் பத்து விமானங்களை வாங்கும் திட்டத்தையும் பாரமவுன்ட் வைத்துள்ளதாம். இதற்காக மொத்தம் 1.5 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கவுள்ளது பாரமவுன்ட்.
இதுதொடர்பாக ஏர்பஸ் நிறுவனத்துடன் பாரமவுன்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டுள்ளது.
மேலும் விரைவில் சர்வதேச சேவைகளையும் தொடங்க பாரமவுன்ட் நிறுவனம் உத்தேசித்துள்ளது. தூர கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த சேவை தொடங்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications