கர்நாடகாவில் குடும்பத்துடன் அத்வானி ஓய்வு!
பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியைடுத்து கட்சியில் கடும் பூசல் நடந்து வரும் நிலையில் பாஜக தலைவர் அத்வானி கர்நாடக மாநிலம் குடகு மலை பகுதிக்கு ஓய்வெடுக்க குடும்பத்துடன் வந்துள்ளார். அவர் இங்கு ஐந்து நாட்கள் இருப்பார் என தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானி நாடு முழுவதும் பறந்து பறந்து பிரச்சாரம் செய்தானர். ஆனாலும், பாஜக தேர்தலில் மோசமான தோல்வியை தழுவியது.
இந் நிலையில் நேற்று டெல்லியில் இருந்து விமான மூலம் மனைவி கமலா மற்றும் குடும்பத்தாருடன் அவர் பெங்களூர் வந்தார். பின்னர் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி நகருக்கு சென்றனர்.
அப்பகுதியில் உள்ள விரஜ்பேட் என்னும் இடத்தில் ஆரஞ்சு கவுன்டி ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
தரைமட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த பகுதி ஆண்டு முழுவதும் குளுகுளு என இருக்கும். எழில் கொஞ்சும் காபி தோட்டங்களும், அழகான பள்ளத்தாக்குகளும், சிறு ஓடைகளும், அருவிகளும் இப்பகுதியை நல்ல சுற்றுலா தலமாக மாற்றியுள்ளது.
பாஜக பொதுச் செயலாளரும், தெற்கு பெங்களூர் எம்.பியுமான ஆனந்த் குமாரும் அவருடன் சென்றுள்ளார்.