நாமக்கல்லில் பரவும் மர்ம காய்ச்சல்-அமைச்சர் விஜயம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் அருகே ஒரு கிராம மக்களை மர்ம காய்ச்சல் பாடாய்படுத்தி வருகிறது. இவர்களுக்கு மருத்துவம் செய்ய அப்பகுதி டாக்டர்களும் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

நாமக்கல் அருகிலுள்ள தாதம்பட்டிமேடு கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள்.

இந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் ஒருவருக்கு காய்ச்சலுடன் திடீர் வாந்தி பேதியும் ஏற்பட்டுள்ளது. இந்த மர்ம காய்ச்சல் தற்போது அந்த கிராமத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு தொற்றி கொண்டுள்ளது.

சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என அனைவரும் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றால் அங்கு டாக்டர்கள் மருத்துவம் பார்க்க தயங்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நாமக்கல் மாவட்ட மக்கள் ஒருவித பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தகவலை அறிந்த மத்திய சுகாதாரத்துறை இணைமைச்சர் காந்தி செல்வன் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்யுமாறு டாக்டர்களை கேட்டு கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+