வங்கியில் ரூ. 4.5 கோடி மோசடி-டாக்டருக்கு வலை
கடையநல்லூர்: கடையநல்லூர் இந்தியன் வங்கி கிளையில் ரூ. 4.5 கோடியை மோசடி செய்த டாக்டரையும், மற்றொரு பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக வங்கியின் மானேஜர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தென்காசியில் பிரபலமான டாக்டர்கள் தங்கம் மற்றும் கிருஷ்ணமூர்ததி. இவர்களின் இளைய மகன் வெங்கடேஷன். இவரும் தென்காசியில் டாக்டராக உள்ளார். இவரது மனைவியும் டாக்டர் ஆவார். இவர்கள் குடும்பத்திற்கு சொந்தமாக தென்காசியில் கிளினிக் ஒன்று செயல்படுகிறது.
மேலும், டாக்டர் வெங்கடேஷன், மாயா என்ற பெண்மணியுடன் சேர்ந்து கிரனைட் தொழில், காற்றாலை அமைத்தல் போன்ற தொழில்களையும் செய்து வந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் கடையநல்லுர் இந்தியன் வங்கியில் பலரையும் இங்கு டெபசிட் செய்ய வைத்துள்ளனர்.
அத்துடன் தங்களின் தொழில் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து பலகோடி ரூபாய் வர இருப்பதாகவும், அதை இந்த கிளையில் டெபசிட் செய்ய போதவதாகவும் மானேஜர் அய்யாமணிக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் மானேஜர் அய்யாமணியுடன் நெருக்கமாகிவிட்டார்கள்.
இந்நிலையில் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்த வங்கியில் தங்களுக்கு தெரிந்த ஒருவரை ரூ. 5 கோடி டெபசிட் செய்ய வைத்துள்ளனர். அதன் பின்னர் இவர்கள் இருவரும் தங்களது வேலையை காட்டியுள்ளனர்.
டெபாசிட் பணம் ரூ. 5 கோடியை டெபாசிட் செய்தவருக்கு தெரியாமல் போலி ஆவணம் தயாரித்து அந்த டெபசிட்டின் பேரில் ரூ. 4.5 கோடி கடன் பெற்றுள்ளனர். இவர்கள் கடன் பெற்ற சில நாட்களிலே டெபாசிட் செய்தவரும் தனது பணத்தை திரும்ப எடுத்து கொண்டார்.
இது சமீபத்தில் நடந்த வங்கி ஆடிட்டிங்கின் போது இந்த கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி மானேஜர் அய்யாமணி மற்றும் உதவி மானேஜர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடன் பெற்ற டாக்டர் வெங்கடேஷன் மற்றும் அவரது பங்குதாரர் மாயா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications