மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிபத்து - மின்கசிவு என தகவல்
Subscribe to Oneindia Tamil
மும்பை: தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி மீண்ட மும்பை தாஜ் ஹோட்டலில் இன்று சிறிய தீவிபத்து ஏற்பட்டது. மின்கசிவே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்த ஹோட்டல் தாஜ். பலரது உயிர்களும் இந்த சம்பவத்தின்போது பலியாயின.
இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதலிலிருந்து மீண்டு புதுப் பொலிவுடன் செயல்பட்டு வரும் தாஜ் ஹோட்டலின் மேல் மாடியில் இன்று சிறிய தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். இந்த தீவிபத்தில் எந்தவித உயிர்ச் சேதமும் இல்லை. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
நான்கு தீயணைப்பு வண்டிகள், எட்டு தண்ணீர் லாரிகள் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications