அடுத்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் ரயிலில் ரூ. 10க்கு 7 பூரி
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த வாரம் முதல் ஜனதா சாப்பாடு வழங்கப்படும். ரூ. 10க்கு 7 பூரி, மசாலா கிழங்கு ஆகியவை கொடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக ரயில்வே அமைச்சகத்துக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன. அதே போல், உணவு பொருட்களின் விலைகளும் தாறுமாறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதையடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இந்த குறைகளை போக்க உடனடியாக உத்தரவிட்டார். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஜனதா சாப்பாடு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
உணவு விலையை அதிகரிக்கும் மற்றும் உணவின் விலையை குறைந்து வழங்குபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது உரிமம் பறிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் மட்டுமே ஜனதா சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இதை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஜனதா சாப்பாடு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் ரயில்வே அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இதற்காக சில தனியார் ஹோட்டல்கள் மூலம் ஜனதா சாப்பாடு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
அடுத்த வாரம் முதல் சென்னை எழும்பூர், மதுரை, கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் ஜனதா சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனதா சாப்பாட்டில் ரூ. 10க்கு 7 பூரி மற்றும் மசாலா கிழங்குடன் வழங்கப்படுவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் 7 பூரி, 175 கிராம் மசாலா கிழங்கு ஒரு அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்படுகிறது. இதை இந்திய சமையல் மற்றும் சுற்றுலா துறை தயாரித்து கொடுத்து வருகிறது.
-
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications