இந்திய மாணவர்களை காக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இணையத் தளத்தில் விளக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கலான பொது நல வழக்கில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அதில் திருப்தியைடயாத நீதிபதிகள் தன்வீர் பண்டாரி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச்,
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. இதைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை பலன் அளிக்கவில்லை மத்திய அரசு எடுத்த முயற்சிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து அங்கு மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதை எப்படி பார்த்து கொண்டிருக்கிறீர்கள்?.
இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். மாணவர்களில் பெற்றோரும், உறவினர்களும் பீதியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறையின் இணையத் தளம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையத் தளம் ஆகியவை மூலம் உரிய பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தர வேண்டும்.
அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதில் விளக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
முன்னதாக அரசின் சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வானாவதி, ஆஸ்திரிலேயாவி்ல் இந்திய மாணவர்கள் மீது நடந்த அனைத்துத் தாக்குதல்களும் இன வெறி தொடர்பானவை அல்ல என்றார்.
இந் நிலையில் ஆஸ்திரேலியாவில் நேற்றும் இரு இந்திய மாணவர்கள் பீர் பாட்டில்களால் தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications