For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் சுனாமி எச்சரிக்கை செயற்கைக்கோள்!

By Staff
Google Oneindia Tamil News

குலசேகரம்: சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கைகளை துல்லியமாக தெரிவிக்கும் ஓசன்சாட் செயற்கைகோள் இன்னும் இரண்டு வாரத்தில் விண்ணில் செலுத்துப்படும் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த திருநந்திகரை. இங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் வழிபடுவதற்காக அவர் குடும்பத்துடன் நேற்று வந்தார்.

அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

சமீபத்தில் இந்திய அனுப்பிய சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக செயல்படுகிறது. சந்திராயன்-2 வரும் 2012ல் விண்ணில் ஏவப்படும்.

ஜூலை இரண்டாவது வாரத்தில் ஓஷன்சாட் செயற்கை கோள் பிஎஸ்எல்வி சி-14 என்ற ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும்.

கடல் சம்பந்தமான ஆராய்ச்சிகளும், சுனாமி, புயல் எச்சரிக்கை மற்றும் பருவமழை எப்போது துவங்கும், எப்போது முடியும் போன்ற தகவல்களையும் இதன் மூலம் துல்லியமாக பெறலாம் 2015ல் மனிதர்களுடன் கூடிய விண்கலம் ஏவப்படும் என்றார் மாதவன் நாயர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X