நாளை கூடும் நாடாளுமன்றம்-6ம் தேதி பட்ஜெட்
டெல்லி: நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. 3ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 6ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.
மக்கவைத் தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பதவி ஏற்றுள்ளதையடுத்து இப்போது முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாளை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
3ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 6ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திய லிபரான் கமிஷன் தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்பித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் பாஜக தரப்பு பெரும் அமளியில் ஈடுபடும் என்று தெரிகிறது.
இந்த கூட்டத் தொடரில் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், அதில் பிற்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் தான் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று முலாயம், லாலு, சரத்யாவத் போன்ற தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால் இது தொடர்பாக கடும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று அனைத்து கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் மீரா குமார் ஆலாசனை நடத்தினார்.