மிரட்டிய அமைச்சர் பெயரை நீதிபதி சொல்ல வேண்டும் - சோலி சொரப்ஜி
டெல்லி: தனது பணியில் குறுக்கிடும் வகையில் தலையிட்ட அமைச்சர் யார் என்பதை பகிரங்கமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், உயர்நீதிமன்ற நீதிபதியே, தன்னை மிரட்டிய மத்திய அமைச்சர் யார் என்பதை பகிரங்கமாக சொல்லி விட வேண்டும். அவரது அமைதியால் இந்தப் பிரச்சினை அரசியலாகி வருகிறது. மேலும், யார் நினைத்தாலும் நீதிபதிகளைத் தொடர்பு கொண்டு பேசி எதையும் சாதித்து விடலாம் என்ற தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவி விடும்.
இதை மாற்றும் வகையில், நீதிபதியே முன்வந்து தன்னை கட்டுப்படுத்த முயன்ற அமைச்சர் யார் என்பதை சொல்லி விட்டால், எதிர்காலத்தில் யாரும் நீதித்துறையின் நடவடிக்கையில் தலையிட முடியாத சூழ்நிலையை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார் சொரப்ஜி.