பட்ஜெட்டில் கிராமவாசிகள்-விவசாயிகளுக்கு 'ஜாக்பாட்'!
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு்ள்ளது.
இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்து கூறியதாவது:
தேசிய அளவி்ல் அமலாக்கப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது (காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவும் காரணமாக இருந்த முக்கியத் திட்டம் இது).
இத் திட்டத்தால் நாடு முழுவதும் 4.47 கோடி கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டில் 100 நாள் வேலை கிடைத்தது.
இதுவரை இந்த் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு ஒரு நாள் ஊதியம் ரூ. 80 ஆக இருந்தது. இது இனிமேல் ரூ. 100 ஆக உயர்த்தப்படும்.
விவசாயத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை நிலை நிறுத்த இந்த அரசு முழு முயற்சி எடுக்கும்.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு புதிய கடன்கள் வழங்க 3.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 8,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரக வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சமூக வளர்ச்சிக்கு இந்த அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications