டீசல் விலை உயர்வு - லாரி வாடகை 25 % உயர்த்தப்படுகிறது
நாமக்கல்: டீசல் விலை உயர்வை தொடர்ந்து தமிழகத்தில் லாரி கட்டணங்கள் சுமார் 25 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
வரும் 13ம் தேதி நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் நடக்கிறது. அதில் லாரி கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 அதிகரிக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ளனர்.
போக்குவரத்து தொழில் ஏற்கனவே சாலை வரி, உதிரி பாகங்களின் விலை உயர்வு, டயர் விலையில் ஏற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்றும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்க சாவடிகளும் தங்களது இஷ்டத்துக்கு வரியை உயர்த்தி லாரி உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலி தருகின்றனர்.
இந்நிலையில் டீசல் விலையும் உயர்ந்திருப்பது நலிவடைந்திருக்கும் லாரி தொழிலை மேலும் மோசமாக்கியுள்ளது. இதனால் லாரி கட்டணத்தை 25 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
லாரி கட்டணத்தை உயர்த்தினால், அடிப்படை பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து பொது மக்கள் பெரிதும் அவதிப்படுவார்கள் என்பது தெரியும். ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை.
நாங்கள் மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர்கள் விலை குறைப்பு செய்தால் கட்டணத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் ஏதும் ஏற்படாது என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications