பால் தாக்கரேவுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஆபரேஷன்
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு விரைவில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவி்த்துள்ளனர்.
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே கடந்த பல மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் சிறிய அடைப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அமெரிக்கா சென்றிருந்த உத்தவ் தாக்கரே உடனடியாக மும்பை திரும்பினார். அவரது மருமகனும் மகாராஷ்டிரா நிர்மான் சேவா அமைப்பின் தலைவருமான ராஜ் தாக்கரேவும் அவரை சென்று சந்தித்து, நலம் விசாரித்தார்.
இந்நிலையில் பால் தாக்கரேவுக்கு விரைவில் ரத்த குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிக்சை செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.