நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதியில் 60 சதவீதத்தை நன்கொடை நாடுகள் வழங்கும் - இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான 155 மில்லியன் டாலர் நிதியில், 60 சதவீதத்தை நன்கொடையாளர் நாடுகள் வழங்க உறுதியளித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை மனித உரிமைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறுகையில், உதவி நிதியாக நன்கொடையாளர் நாடுகள் ஏற்கனவே 40 மில்லியன் டாலர் நிதியை அளித்துள்ளன.
இது போக மொத்தம் தேவைப்படும் 155 மில்லியன் டாலர் நிதியில் 60 சதவீதத்தை தரவும் நன்கொடையாளர் நாடுகள் உறுதியளித்துள்ளன.
வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய பகுதிகளில் உள்ள அகதிகளின் நிலையை மேம்படுத்த இந்த நிதியுதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications