வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது-150 பவுன் நகைகள் பறிமுதல்
நாமக்கல்: நாமக்கல் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு வழிப்பறி திருடர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 150 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தைப் பேட்டை புதூரை சேர்ந்தவர் சரஸ்வதி, இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று (06.07.09) அன்று பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த இருவர் சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை அறுத்துகொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தார்கள்.
இதையடு்தது சரஸ்வதி பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை மடக்கி பிடிக்க போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பரமத்தி வேலூர் சாலையில், வண்டியில் வந்த திருடர்கள் இருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் அவர்கள் அடகு வைத்திருந்த 150 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications