15 இந்தியர்களை கப்பலுடன் கடத்திய சொமாலியா கடற்கொள்ளையர்கள்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய சரகக்குக் கப்பல் ஒன்று 15 பேருடன் சென்று கொண்டிருந்தபோது, போஸாசா துறைமுகத்திற்கு 14 கடல் மைல் தொலைவில் அதை கடற்கொள்ளையர்கள் மடக்கி கடத்திச் செனறு விட்டனர்.
தற்போது அந்தக் கப்பல் சட்டத்தின் ஆட்சி இல்லாத, சொமாலியாவின் வட கிழக்குப் பிராந்தியத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து இந்தக் கப்பல் சொமாலியாவில் உள்ள துறைமுகத்திற்கு வந்தது. சரக்குகளை இறக்கி விட்டுத் திரும்பும்போது கடத்தப்பட்டது.
இந்தக் கப்பல் சவூதி அரேபியாவுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சரக்குப் போக்குவரத்தை கையாண்டு வருவதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications