மகாராஷ்டிரா-படகுகள் மோதியதில் 19 பெண்கள் உட்பட 34 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிராவில் வெய்ன்கங்கா நதியில் சென்று கொண்டிருந்த இரண்டு படகுகள் மோதி கொண்ட விபத்தில் சுமார் 19 பெண்கள் உட்பட 34 பேர் பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் பந்தாரா மாவட்டத்தில் வெய்ன்கங்கா நதி ஓடுகிறது. இப்பகுதியில் இருப்பவர்கள் ஆற்றை கடப்பதற்கு படகுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு காமாரி புடி என்ற இடத்தில் இருந்து சுமார் 12 கிமீ., தொலைவில் ஆற்றில் சென்று கொண்டிருந்த இரண்டு படகுகள் மோதி கொண்டது. இதில் இரண்டு படகுகளில் இருந்தவர்களும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இது குறித்து அம்மாவட்ட எஸ்பி சுரேஷ் சாகர் கூறுகையில்,
இந்த படகுகளில் இருந்த பெண்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்கள். நேற்று மாலை அவர்கள் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பும் போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
பந்தாரா மற்றும் அருகில் உள்ள கோன்டியா மாவட்ட நீச்சல் வீரர்கள் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளனர். இதுவரை 19 பெண்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயரும் என அஞ்சப்படுகிறது என்றார் அவர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications