அதே இடத்தில் பாபர் மசூதியைக் கட்டி கொடுங்கள்-திருமா
சென்னை: லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வர வேண்டும். பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்னதாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னதாக மதவெறி கும்பல் ஒன்று பாபர் மசூதியை இடித்தது. அது குறித்து விசாரணை நடந்த லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது.
பொதுவாக எந்தவொரு விசாரணை அறிக்கையும் 6 மாதங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், லிபரான் தனது அறிக்கையை அரசு அளிக்க சுமார் 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிலரின் உள்நோக்கம் காரணமாக இந்த கமிஷன் சுமார் 48 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மக்களு முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அந்த விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன்.
இந்த பிரச்சனையின் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும் என்றார் திருமாவளவன்.
-
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications