மீண்டும் ஆட்சியில் பங்கு கோரும் தங்கபாலு!
புதுக்கோட்டை: தமிழக அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கோரி மீண்டும் தீர்மானம் இயற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதையையும், வாய்ப்புகளையும் அளிக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி மட்டும் தான். அதனால் தான் காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
தமிழக காங்கிரசாரின் உணர்வுகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தெரிவிப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமோ அல்லது குழப்பமோ இல்லை.
தமிழக அமைச்சரவையில் பங்கேற்பது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவிடம் வற்புத்துவோம்.
இது தொடர்பாக காங்கிரசாரின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி கட்சி தலைவர் சோனியாவுக்கு மீண்டும் அனுப்ப உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications