சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கிய பயிற்சி டாக்டர்கள்
சென்னை: பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்கள் இன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகியுள்ளனர்.
பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆகியோர் உதவித் தொகையை அதிகரிக்கக் கோரி காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று 12வது நாளாக போராட்டம் நீடித்தது.
சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து பயிற்சி டாக்டர்கள் சென்னை மருத்துவ கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.சென்னை உள்பட அனைத்து நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனை முன் பயிற்சி டாக்டர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
உதவித் தொகையை அதிகரிக்க கோரி கடந்த 12 நாட்களாக போராடி வருகிறோம். எந்த வித முன் அறிவிப்பும் இன்றி போராட்டம் நடத்தி வருவதாக முதல்வர் கூறுகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்தே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
ஆனால், இதுவரை நடந்த நிகழ்வுகளை துறை அதிகாரிகள், இது வரை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்வைக்கே எடுத்து செல்லவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
இதனால் எங்களை முதல்வரோ அல்லது துணை முதல்வரோ பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். எங்களுக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை.
திங்கள்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தோம்என்றனர்.
போராட்டம் காரணமாக ஏற்கனவே அரசு மருத்துவமனைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு டாக்டர்களுக்கு உதவியாக பயிற்சி டாக்டர்கள்தான் செயல்படுவார்கள். அது தற்போது நின்று விட்டதால் அரசு டாக்டர்கள் விடுமுறை எடுக்க முடியாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பயிற்சி டாக்டர்களின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தால் நிலைமை மேலும் மோசமடையும் எனத் தெரிகிறது.
எச்சரிக்கை...
இந் நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மருத்துவத் துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.
அதில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், டாக்டர்களின் பெயர் பட்டியலை அந்தந்த மருத்துவ கல்லூரி முதல்வர்கள் உடனடியாக மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனரகம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும். இதையடுத்து பல்கலைக்கழகம் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு பயிற்சி டாக்டருக்கு பயிற்சியின்போது மாதத்திற்கு ஒரு நாள் வீதம் வருடத்திற்கு 12 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்கலாம். ஆனால் இவர்கள் இன்றுடன் 13வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் இந்த நாட்கள் கல்லூரிக்கு வராத நாட்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
இதனால் அவர்களுக்கு பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் கிடைப்பது கஷ்டமாகும்.
மேலும் பயிற்சி டாக்டர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெற்றோருக்கு அரசு சார்பில் தந்தியும் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நாளைக்குள் (14ம் தேதி) பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது பயிற்சி காலம் மேலும் தாமதமாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பயிற்சி டாக்டர்களுக்கு ஆதரவாக இன்று இளநிலை எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ- மாணவிகளும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு வந்தனர்.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications