For Daily Alerts
Just In
வருண் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
டெல்லி: உ.பி. மாநிலம் பிலிபித் தொகுதியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியது தொடர்பான வழக்கில் பாஜக எம்.பி. வருண் காந்தி மீது உ.பி. போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
177 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கை, பிலிபித் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 38 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. உ.பி. அரசின் உத்தரவைத் தொடர்ந்து இன்று போலீஸார் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து விரைவில் கோர்ட் குற்றப்பத்திரிக்கையை பரிசீலித்து அதன் நகலை வருண் காந்திக்கு வழங்கும்.
Comments
இந்தியா அரசியல் குற்றப்பத்திரிக்கை உபி vinayagar chaturthi varun gandhi வருண் காந்தி பிலிபித் hate speech துவேஷப் பேச்சு philibit
Story first published: Wednesday, July 15, 2009, 17:49 [IST]