உண்ணாவிரதம் தீவிரமடைகிறது - பயிற்சி டாக்டர்களின் பெற்றோர்களும் குதிக்கிறார்கள்
சென்னை: உதவித் தொகை உயர்வு கோரி கடந்த 3 நாட்களாக பயிற்சி டாக்டர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 19 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முதல்வர் பயிற்சி டாக்டர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சென்னை அரசு மருத்துவமனைக் கல்லூரி வளாகத்தில் 13ம் தேதி தொடங்கிய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் 22 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதுவரை 19 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கும் அவர்கள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர்.
இந்த நிலையில், தங்களது பெற்றோர்களும் இன்று முதல் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக பயிற்சி டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வியாழக்கிழமை முதல் பெற்றோர்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். 17-ந்தேதி முதல் 24 மணி நேரமும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும்'' என்றார்.
இதனால் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications