செயற்குழுக் கூட்டத்திற்கு வர வேண்டாம் - 10 எம்.எல்.ஏக்களுக்கு ஜெ. தடை

அதிமுக செயற்குழு அவசர கூட்டம் நீலகிரி மாவட்டம், குன்னூர் உபாசி சாலையில் உள்ள விவேக் ஓட்டலில் நாளை பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.
செயற்குழு கூட்டத்தில், இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் அவர்களில் 10 பேரை மட்டும் செயற்குழுக் கூட்டத்திற்கு வர வேண்டாம் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஜெவால் வர வேண்டாம் உத்தரவிடப்பட்டுள்ள பத்து எம்.எல்.ஏக்கள்...
பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், கோ.அரி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வி.பி.கலைராஜன், அருண்மொழித்தேவன், மகேந்திரன், துரைராஜ், சாமி, சின்னசாமி ஆகியோரே.
இவர்களில் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கிறார். நாளை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பன்னீர் செல்வம் பேசவுள்ளார். எனவே இவரை வர வேண்டாம் என்று சொல்லியிருப்பதில் விசேஷம் இல்லை.
ஆனால் மற்ற 9 பேருக்கு ஏன் திடீர் தடை என்று தெரியவில்லை. ஒரு வேளை முக்கியமான விவாதத்தின்போது அதிமுக தரப்பில் சபையில் யாரும் இல்லாமல் போய் விடக் கூடாது என்பதற்காக பத்து பேரை மட்டும் உட்கார வைக்கலாம் என நினைத்து ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது.
ஆனால் அப்படியெல்லாம் இல்லை, ஜெயலலிதா ஏதோ ஒரு திட்டத்துடன் இருக்கிறார். அவரது முடிவில் ஏதாவது மறைந்திருக்கலாம் என்று இன்னொரு தரப்பு கூறுகிறது.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications