என்ஆர்ஐ நலத்துறை அலுவலகத்தில் சிபிஐ 'ரெய்ட்'!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் இன்று சிபிஐ ரெய்ட் நடத்தியது.
மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் (Ministry of Overseas Indian Affairs) குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலகக் கிளை சென்னையில் உள்ளது.
வெளிநாடுகளில் குடிபெயர்வோர், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து குடிபெயர்வோர் ஆகியோருக்கு உதவும் அலுவலகம் இது.
அசோக் நகரில் உள்ள இந்த அலுவலகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை அந்த அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
தொடர்ந்து ரெய்டும் விசாரணையும் நடந்து வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் இங்கு போலி விசா கொடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications