கொட்டுது லாபம்: பரபர பங்குச் சந்தை!
மும்பை: வாரத்தின் முதல்நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தையில் பரபரப்பான வர்த்தகம் நடந்து வருகிறது. குறிப்பாக ஐடி துறை சார்ந்த பங்குகளில் இன்று லாபம் கொட்டுகிறது என்றால் மிகையல்ல.
வர்த்தகம் துவங்கியபோதே 220 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இப்போது 320 புள்ளிகள் உயர்வுடன் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதன்மூலம் மீண்டும் 15000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது சென்செக்ஸ்.
இந்த துறை பங்குகள் மட்டும் சராசரியாக 7 சதவிகிதம் வரை லாபத்தில் கைமாறிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக டிசிஎஸ் நிறுவன பங்குகள் மட்டும் 15 சதவிகித லாபத்தில் ரூ.499-க்கு கைமாறிக் கொண்டிருக்கின்றன. விப்ரோவின் பங்குகள் 11 சதவிகித லாபத்திலும், இன்போஸிஸ் பங்குகள் 5 சதவிகித லாபத்திலும் கைமாறுகின்றன.
டிசிஎஸ் பங்குகள் இந்த அளவு அதிக லாபத்தில் கைமாறுவது இந்த ஆண்டில் இதுவே முதல்முறை.
டிஎல்எப், டாடா மோட்டார்ஸ், கிராஸிம் போன்ற பெரிய நிறுவனப் பங்குகளும் 3 முதல் 5 சதவிகிதம் வரை லாபத்தில் கைமாறிக் கொண்டுள்ளன.
கோல்டுமென் சாக்ஷ், ஜேபி மார்கன் மற்றும் சிட்டி குரூப் நிதி நிறுவனங்களின் நிதி நிலை மீண்டும் லாபகரமாக மாறியிருப்பது ஐடி துறையில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதன் எதிரொலிதான் இந்த அதிரடி மாற்றம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து 5-வது நாளாக இந்தியப் பங்குச் சந்தை ஏறுமுகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications