நர்சிங் மாணவிகள் பலாத்காரம் - தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ கைது
ஹைதராபாத்: கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ டிவி. ராமாராவ் கைது செய்யப்பட்டார்.
மேற்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூர் எம்.எல்.ஏ. ராமாராவ். இவர் நிடதவோலு என்ற இடத்தில் உள்ள ராமாராவுக்குச் சொந்தமான டிவிஆர் நர்சிங் கல்லூரியை நடத்தி வருகிறார்.
2 வாரங்களுக்கு முன்பு இந்தக் கல்லூரியில் படித்து வரும் ஐந்து கேரள மாணவிகள், தங்களை ராமாராவ் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு முயற்சித்ததாகவும் மாநில உள்துறை அமைச்சர், மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்தனர்.
அதற்கு முன்னதாக ஜூன் 18ம் தேதி போலீஸார், ராமாராவ் மீது ஒரு மாணவியைக் கற்பழித்துக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குரிய ஆதாரம் கிடைக்காததால் போலீஸார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் ஐந்து கேரள மாணவிகளை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகளும், உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். மேலும் சிஐடி போலீஸ் முன்பும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
மாநில ஆளுநரையும் நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து அறிக்கை தருமாறு மாநில மனித உரிமை ஆணையம் போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதில், ராமாராவ் மீதான புகாரில் உண்மை இருப்பதாக போலீஸார் அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து ராமாராவ் இன்று கைது செய்யப்பட்டார்.
-
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications