நர்சிங் மாணவிகள் பலாத்காரம் - தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ கைது
ஹைதராபாத்: கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ டிவி. ராமாராவ் கைது செய்யப்பட்டார்.
மேற்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூர் எம்.எல்.ஏ. ராமாராவ். இவர் நிடதவோலு என்ற இடத்தில் உள்ள ராமாராவுக்குச் சொந்தமான டிவிஆர் நர்சிங் கல்லூரியை நடத்தி வருகிறார்.
2 வாரங்களுக்கு முன்பு இந்தக் கல்லூரியில் படித்து வரும் ஐந்து கேரள மாணவிகள், தங்களை ராமாராவ் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு முயற்சித்ததாகவும் மாநில உள்துறை அமைச்சர், மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்தனர்.
அதற்கு முன்னதாக ஜூன் 18ம் தேதி போலீஸார், ராமாராவ் மீது ஒரு மாணவியைக் கற்பழித்துக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குரிய ஆதாரம் கிடைக்காததால் போலீஸார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் ஐந்து கேரள மாணவிகளை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகளும், உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். மேலும் சிஐடி போலீஸ் முன்பும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
மாநில ஆளுநரையும் நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து அறிக்கை தருமாறு மாநில மனித உரிமை ஆணையம் போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதில், ராமாராவ் மீதான புகாரில் உண்மை இருப்பதாக போலீஸார் அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து ராமாராவ் இன்று கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications