இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை குறைந்தது
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் வாக்காளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கம்பம், இளையாங்குடி, தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 18ம் தேதி நடக்கிறது.
கடந்த மக்களவை தேர்தலின் போது போலி வாக்காளர்கள் சேர்ப்பை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
வீடு, வீடாக சென்று சோதனை நடத்தினர். இறந்தவர்கள், 2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. வாக்காளர் சேர்ப்பின் போது உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் தமிழகம் முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கம்பம் தொகுதியில் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் 1,65,000 வாக்காளர்கள் இருந்தனர். தற்போதைய 1,45,000 வாக்காளர்களே உள்ளனர். 20,000 பேர் குறைந்துள்ளனர்.
இளையாங்குடி தொகுதியில் கடந்த தேர்தலில் 1,45,800 ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 1,26,623 ஆனது. சுமார் 19,000 வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4,20,186. இப்போது 79,000 வாக்காளர்கள் குறைந்து 3,41,240 ஆக உள்ளது.
பர்கூர் தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 1,97,235 ஆக இருந்தது. இப்போது 13,511 வாக்காளர்கள் குறைந்து 1,83,724 ஆக உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 1,40,038 வாக்காளர்கள் இருந்தனர். இப்போது 1,16,607 ஆக உள்ளது. 23,431 வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications