சென்செக்ஸில் 420 புள்ளிகள் உயர்வு: முன்கூட்டியே நிறுத்தப்பட்ட பங்கு வர்த்தகம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 420 புள்ளிகள் உயர்ந்தன. எதிர்ப்பார்க்கப்பட்டதை விட அதிகமான பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் இன்று முன்கூட்டியே பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு லாப அறிக்கைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களுமே நல்ல லாபம் ஈட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர் முதலீட்டாளர்கள்.

இதனால் பல்வேறு துறைப் பங்குகளுக்கும் அதிக தேவை ஏற்பட்டது இன்றைய வர்த்தகத்தில். எனவே பங்குச் சந்தையில் வழக்கத்தைவிட முன்னதாகவே வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

சென்செக்ஸில் இன்று 420 புள்ளிகள் உயர்ந்தன. நிப்டியில் 129 புள்ளிகள் உயர்ந்தன.

ஹாங்காங் உள்ளிட்ட இதர ஆசிய சந்தைகளிலும் பங்கு வர்த்தம் இன்று உச்ச நிலையில் இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+