Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலியோ சொட்டு மருந்து குறித்த வதந்திகள்-தடுக்க பிரசாரத்தில் குதிக்கும் அரசு

Subscribe to Oneindia Tamil

மதுரை: போலியோ சொட்டு மருந்துத் திட்டம் குறித்து வதந்திதகள் பரப்புவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக நடந்த போலியோ தடுப்பு மருந்துத் திட்டத்தின்போது வதந்திகள் கிளம்பியது. இதனால் ஏராளமான பெற்றோர் பெரும் குழப்பமும், பீதியும் அடைந்தனர்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்தத் திட்டத்தை பிரச்சினைகள் இன்றி செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக வதந்திகளை மக்கள் நம்பாமல் இருக்கும் வகையில், விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் எஸ்.இளங்கோ கூறுகையில் ரோட்டரி சங்கங்கள், அரசு சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து இதுபோன்ற வதந்திகளை முறியடிக்கும வகையில் செயல்பட வேண்டும்.

மக்களிடையே, குறிப்பாக பெற்றோர்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகதளுக்கு பாதுகாப்பான முறையில் சொட்டு மருந்து தருவது குறித்தும், சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி மக்களிடையே பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

போலியோ திட்டத்தின் முதல் எதிரியே விஷமத்தனமாக பரப்பப்படும் வதந்திகள்தான்.

தமிழகத்தில் கடந்து ஐந்து ஆண்டுகளாக போலியோ குறைபாடு எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் டெல்லி, உ.பி., பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் சிலருக்கு போலியோ தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாம் விழிப்புணர்வுடன் இருந்து போலியோவை முழுமையாக ஒழிக்க துணை நிற்க வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+