அதிகாரிகள் பற்றாக்குறையில் ராணுவம் - 11,387 பேர் தேவை
டெல்லி: ராணுவத்திற்கு 11,387 அதிகாரிகள் பற்றாக்குறையாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேற்று லோக்சபாவில் தெரிவித்தார்.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடற்படைக்கு 1512 அதிகாரிகளும், விமானப்படையில் 1400 அதிகாரிகளும் பற்றாக்குறையாக உள்ளது.
இருப்பினும் முப்படைகளிலும் அதிகாரிகளுக்குக் கீழ் உள்ள வீரர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை எதுவும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் ராணுவத்தில் வீரர்களாக சேர்ந்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ராணுவத்தில் 5033 அதிகாரிகள், 96 ஆயிரத்து 453 வீரர்கள் சேர்ந்துள்ளனர். கடற்படையில் 1209 அதிகாரிகள், 6792 வீரர்கள் இணைந்துள்ளனர். விமானப்படையில், 1451 அதிகாரிகள், 21,311 வீரர்கள் சேர்ந்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ராணுவத்தில், 3764 அதிகாரிகள், 27,477 வீரர்கள் விருப்ப ஓய்வு அல்லது விடுபடக் கோரி விண்ணப்பித்தனர்.
கடற்படையில் 842 அதிகாரிகளும், 126 வீரர்களும் ஓய்வு கோரினர். விமானப்படையில் 893 அதிகாரிகளும், 3961 வீரர்களும் ஓய்வு கோரினர்.
ஏவி சிங் கமிட்டி பரிந்துரையின் பேரில், 750 லெப்டினென்ட் கர்னல் பதவி கர்னல் பதவியாக உயர்த்தப்பட்டுள்ளது. கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினென்ட் ஜெனரல் மற்றும் இரு பதவிகளில் கூடுதலாக 1896 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அந்தோணி.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications