கேஜி கேஸ் விவகாரம் - பெட்ரோலிய அமைச்சர் மீது அனில் பாய்ச்சல்
டெல்லி: கேஜி கேஸ் (கிருஷ்ணா கோதாவரி படுகை கேஸ்) விவகாரத்தில் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவும், பெட்ரோலிய அமைச்சகமும் நடந்து கொள்கின்றன என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிட்டெட் (ஆர்.என்.ஆர்.எல்.) நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி.
ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசியபோது அனில் அம்பானி இந்த பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.
மத்திய அரசின் பெட்ரோலியத்துறைக்காக கேஜி படுகைப் பகுதியிலிருந்து கேஸ் எடுக்கும் பணியில் அனில் மற்றும் முகேஷுக்குச் சொந்தமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் விலை நிர்ணயம் செய்வது, லாபப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து இரு நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சினை வெடித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் முகேஷ் அம்பானி. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை கருத்து தெரிவிக்கையில், இரு நிறுவனங்களுமே மத்திய அரசுக்காகத்தான் கேஸ் எடுக்கின்றன. ஏதோ அவற்றின் சொந்த இடத்தில் எடுப்பதைப் போல சண்டை போட்டுக் கொள்வதா என்று கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் செப்டம்பர் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் நடந்த நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அனில் அம்பானி, கேஸ் எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தை மீறும் வகையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (முகேஷ் அம்பானியுடையது) நடந்து வருகிறது. மேலும், அதிக லாபத்தை தானே எடுத்துக் கொள்ளும் வகையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் செயல்பட்டு வருகிறது.
பெட்ரோலியத் துறை அமைச்சரும், அமைச்சகமும், இந்த விஷத்தில் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக, பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், ஆர்.என்.ஆர்.எல் நிறுவனத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் தெரியாமல் பெட்ரோலியத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்து வருகிறது என்றார் அனில்.
அனில் அம்பானியின் இந்தப் புகார் குறித்து முகேஷ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரது வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக நிறையப் பேசியாகி விட்டது. தற்போது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. எனவே வெளியில் இதுகுறித்துப் பேசுவது சரியல்ல என்றார்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications