முகாம்களில் உள்ள தமிழர் குழந்தைகளுக்கு அம்மைத் தடுப்பூசி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: வன்னியில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களின் குழந்தைகள் 40 ஆயிரம் பேருக்கு அம்மைத் தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் அமலாக்கப்படுகிறது.

முறையாகத் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள், இதுவரை தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் 40 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்டவுள்ளது.

இதுகுறித்து இலங்கை சுகாதார அமைச்சர் நிமல் சிறீபாலா கூறுகையில், முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு அம்மைத் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து ஆகியவற்றை வழங்குமாறு பொது சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை யுனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவனங்களின் துணையுடன் மேற்கொள்கிறோம்.

இந்த தடுப்பூசி தவிர, குழந்தைகளுக்கு விட்டமின் ஏ மற்றும் குடற்புழு தடுப்பு மருந்தும் தரப்படும்.

30 நிலையங்களில் நடைபெறும் இந்தப் பணியில் 100 நர்சுகளும், 1200 தன்னார்வத் தொண்டர்களும் ஈடுபட்டுள்ளனர்

இந்த திட்டம் குறித்து யுனிசெப் செய்தித் தொடர்பாளர் மிஷல் மான்டாஸ் கூறுகையில், 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசியும், போலியோ சொட்டு மருந்தும் வழங்கப்படவுள்ளது.

இந்தத்திட்டத்தின் மூலம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தேவையில்லாமல் உயிரிழக்கும் அபாயம் தடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+