கீழ்பாக்கம்: மனநோயாளிகள் மோதல்-ஒருவர் பலி
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மன நோயாளிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
மகாபலிபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (38) மனநிலை பாதிக்கப்பட்டு 2006ம் ஆண்டில் கீழ்ப்பாக்கம் மனநோய் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வல்லவராயனுக்கும் (25) இஸ்மாயிலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றும் இதேபோல இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. அப்போது இஸ்மாயிலின் கழுத்தில் ஏறி வல்லவராயன் மிதித்தார். இதில் மூச்சு திணறி அவர் பரிதாபமாக இறந்தார். இஸ்மாயில் இறந்தது கூட தெரியாமல் வல்லவராயன் அவரைத் தாக்கிக் கொண்டே இருந்துள்ளார்.
மருத்துவமனை ஊழியர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின் வல்லவராயனை மடக்கி மயக்க ஊசி போட்டு தனி வார்டில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வல்லவராயன் மன நோயாளி என்பதால் அவரை கைது செய்யவில்லை.












Click it and Unblock the Notifications