7 ஆண்டுகளில் இல்லாத மோசமான மழைப்பொழிவு - வானிலை ஆய்வு மையம்

Subscribe to Oneindia Tamil

Drought
டெல்லி: கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான மழைப் பொழிவை இந்த ஆண்டு நாடு சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த மையத்தின் இயக்குநர் அஜீத் தியாகி கூறுகையில், 'இந்த ஆண்டை வறட்சி ஆண்டாக மாநிலங்கள் அறிவிக்கலாம். அதற்கான காரணங்கள் உள்ளன. வழக்கமான மழைப்பொழிவை விட குறைவகவே இந்த ஆண்டு இருக்கும் என வானிலை முன் கணிப்புகள் கூறுகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத ஏஅளவு குறைந்த மழைப்பொழிவுதான் இந்த ஆண்டு இருக்கும்', என்றார்.

நாட்டின் ஓரிரு மாநிலங்கள் தவிர பிற பகுதிகளில் வழக்கமான மழைப் பொழிவு இருக்காது என வானிலை ஆய்வு மையமே கூறிவிட்டதால், வறட்சி ஆண்டாக அறிவித்து இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் என மாநிலங்களுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் விளைவாக, பீஹார் மாநிலம் தனது 36 மாவட்டங்களை இயற்கை பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களாக அறிவித்துவிட்டது. அவற்றுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது.

மழைப் பொழிவு பாதிக்கப்படும் என்று தெரிந்துவிட்டதால், விவசாய எந்திரங்கள் உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள், உற்பத்தி அளவைக் குறைத்துக் கொண்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+